Skip to main content

Posts

Showing posts from November, 2013

வா வருங்காலமே....

இவ்வுலகம்  சின்னஞ்சிறு கனவுகளில் இருந்து உருவானது உண்மையான உழைப்பிலிருந்து உருவானது  திடமான நம்பிக்கையிலிருந்து நிலையானது இனி கனவுகள் மேம்படட்டும் உழைப்பு உயிராகட்டும்  நம்பிக்கை நன்கூரம் பதிக்கட்டும்  வாருங்கள் புது உலகம் செய்வோம்  உன்னுள் இருக்கும் சக்தியை உற்றுப்பார்  உலகம் வளர்த்த தொழில்நுட்பம் கற்றுப்பார்  உன் உழைப்பின் ஒரு துளி வியர்வையில் இவ்வுலகம் தாகம் தணிக்கும்  உன் அறிவின் ஒரு துளிருக்கு இவ்வுலகம் யாகம் படைக்கும்  ஏங்கே கிடக்கும்  வா வருங்காலமே     இனி விவசாயம் விண்ணிலும் நடக்கும்      விண் மீன்கள் மண்ணிலும் படுக்கும்      கண்ணுக்கு எட்டும் தூரத்தை கையிலடக்கு      விண்ணுக்கு எட்டும் உன் கனவை மன பையில்லடக்காதே      மண்ணுக்குள் நீருண்டாம் முன்னோருக்கு      நீருக்குள்ளும் மண்ணுண்டாம் முனைவோருக்கு      வா வரலாற்றின் சரித்திரத்தையும் மாற்றுவோம்           வருங்காலத்தின் எதிர்காலத்தையும் மாற்றுவோம்   ----- கிராமப்புற கல்வி ஏவுதள  மையத்திற்கான படைப்பு 

உழவும் உழவனும்

அவன் விதைத்த விதை தான் இன்று உலகமாய் விளைந்து  நிற்கிறது அக்குது இல்லால் இவ்வுலகம் ஓர் களி மண் உருண்டை மண்ணோடு இருப்பின் அவனுக்கு கொண்டாட்டம்  அக்குது இல்லால் உன் வயிற்றுக்கு என்றுமே திண்டாட்டம் செடியிற் நிறமேனோ பச்சை, உழவன் உதிரம் நிறமரியா இயற்கை  மதியை மடியில் உறங்க வைத்துவிட்டு , வயலை வால் மார்ட்டுக்கு விற்பது மனிதன் செயற்கை  மழை  போல் அவன் மனம்  மகிழ பொழியா  விடினும்  களை  பிடுங்க  ஓர் கை நீட்டி  கொடுக்கா  விடினும்  உழவன் உலகை பாராட்டு,  இல்லையேல் பார் ஆடிவிடும்  அவன் உழைப்பை கொண்டாடு,  அவனுக்காக மன்றாடு  மண்ணின் மகத்துவம் பேணு, மண்ணை கண்ணாக காணு  உழவனுக்கு உறுதுணை செய் ஓர் பருக்கை தான் பொன்னென்பது மெய்   எத்தகையனும் எப்பொருளும் எவ்வளவும் ஈட்டினும்  இவ்வித்தகையவன்  வளைந்தெடுத்தா ற்தான் உணவு  ஆம் விளைந்தெடுத்தாற்தான் உலகு